011 202 4848

செய்திகள்

HNB FINANCE PLC பணிப்பாளர் சபைக்கு புதிய பணிப்பாளர் ஒருவர் நியமிக்கப்பட்டார்

HNB FINANCE PLC இன் பணிப்பாளர் சபைக்கு கோவிந்த கிம்நத பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார். அவர் HNB FINANCE PLCஇன் சுயாதீனமற்ற, நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளராக 2020 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 10ம் திகதியிலிருந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளார். இதற்கு முன்னர் சுயாதீனமற்ற, நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளரும் மற்றும் நிறுவனத்தின் துணைத் தலைவராகவும் கடமையாற்றிய பிரேமலால் பிராக்மனகே ஓய்வு பெற்றதை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கே அவர் நியமிக்கப்பட்டுள்ளார். நிதி நிறுவனத்திற்காக இலங்கை மத்திய வங்கியின் நிர்வாகம் தொடர்பான விதிமுறைகளுக்கு அமைய பணிப்பாளர் சபையின் உறுப்பினராக உச்ச அளவில் கடமையாற்றக் கூடிய கால வரையறை 9 வருடங்கள் என்பதன் காரணமாக அந்த பணிப்பாளர் சபையின் உறுப்பினர் நிறுவனத்திலிருந்து ஓய்வு பெறவேண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பணிப்பாளர் சபைக்கு புதிதாக இணைந்து கொண்ட கோவிந்த பெரேரா இங்கிலாந்தில் நன்மதிப்பு பெற்ற Imperial College of Londonஇல் பட்டம் பெற்றுள்ளதுடன் சிறந்த அனுபவங்களைக் கொண்ட நிதி மூலோபாய தொழில்முறையாளர் மற்றும் நிதி முதலீட்டு ஆலோசகரும் ஆவார்.

தற்போது அவர் இலங்கை காணி கட்டிடத் துறையில் சிறந்த நிறுவனமான பிரைம் குழுமத்தின் மூலோபாய மற்றும் வியாபார மேம்பாட்டு பிரிவிலும் பிரதானியாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அத்துடன் குழுமத்தின் வெளிநாட்டு சந்தை நடவடிக்கைகளையும் அவர் மேற்பார்வை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.