எமது நிறுவனத்தின் சீரான செயல்பாட்டு ஓட்டத்திற்காக கூட்டு பொறுப்புடையவர்கள். எங்கள் சிரேஷ்ட மேலாளர் நிர்வாக குழுவில் HNB நிதிக்கு முதுகெலும்பாக செயல்படத்தக்கதான வலுவான, அர்ப்பணப்புடன் செயல்படும் தனிநபர்களை உள்ளடக்கியுள்ளது.
அவர் பட்டய சந்தைப்படுத்தல் நிறுவனத்தின் சக உறுப்பினராகவும், பட்டய மேலாண்மை கணக்காளர் நிறுவனத்தின் இணை உறுப்பினராகவும் உள்ளார்......
அவர் பட்டய சந்தைப்படுத்தல் நிறுவனத்தின் சக உறுப்பினராகவும், பட்டய மேலாண்மை கணக்காளர் நிறுவனத்தின் இணை உறுப்பினராகவும் உள்ளார். அவர் ஆஸ்திரேலியாவில் உள்ள சான்றளிக்கப்பட்ட மேலாண்மை கணக்காளர் நிறுவனத்தில் சான்றளிக்கப்பட்ட மேலாண்மை கணக்காளராகவும் உள்ளார். இலங்கையின் பட்டய கணக்காளர் நிறுவனத்தில் வணிக மற்றும் நிதி நிர்வாகத்தில் முதுகலை டிப்ளோமாவும் பெற்றுள்ளார். இலங்கையில் நுண்நிதித் துறையில் அவர் ஆற்றிய பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக இந்திய உலக ஆலோசனை மற்றும் ஆராய்ச்சி கழகம் வழங்கிய 2014 ஆம் ஆண்டின் மதிப்புமிக்க மொழிபெயர்ப்பாளர் விருதைப் பெற்றார்.
திரு. பிரியலால் அரங்கல அவர்கள் நிதித் துறையில் 25 வருடங்களுக்கு மேற்பட்ட அனுபவத்தைக் கொண்டுள்ளதுடன் இதில் 13 வருடங்களாக......
திரு. பிரியலால் அரங்கல அவர்கள் நிதித் துறையில் 25 வருடங்களுக்கு மேற்பட்ட அனுபவத்தைக் கொண்டுள்ளதுடன் இதில் 13 வருடங்களாக நுண் நிதித் துறையில் சேவையாற்றியுள்ளார். மலேசியா ரூடவ் பல்கலைக்கழத்தில் விஞ்ஞான முதுமானி பட்டப்படிப்பை பூர்த்தி செய்துள்ளதுடன் அவரிடம் காணப்படுகின்ற நிதித் துறை தொடர்பான ஆழ்ந்த அறிவு மற்றும் நுண்நிதிக் கைத்தொழில் சம்பந்தமான விரிவான அனுபவங்களின் அடிப்படையில் அவர் கம்பனியின் முன்வரிசை பதவியான பிரதான தொழிற்பாட்டு உத்தியோகத்தர் பதவியில் அமர்த்தப்பட்டார்.
2009 ஆம் ஆண்டு எச்.என்.பீ பினான்ஸ் கம்பனிக்கு இலங்கை மத்திய வங்கியின் நிதிச் சபையின் ஊடாக அனுமதிப்பத்திர நிதிக் கம்பனிக்கான அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக் கொள்ளுவதற்கு முதன்மையானதும் மற்றும் மையப்படுத்தியதுமான பணிகளை திரு. அரங்கல அவர்கள் மேற்கொண்டார். அவரது பங்களிப்பை வரவேற்கும் வகையில் 2010 ஆம் ஆண்டு அவர் கம்பனியின் பணிப்பாளர் ஒருவராக நியமிக்கப்பட்டார். இதற்கு முதல் திரு. அரங்கல அவர்கள் கிராமின் கூட்டு தொழில்முயற்சியின் மற்றும் பினான்ஸ் மைக்ரோ கிரடிட் கம்பனியின் பணிப்பாளர் சபையிலும் சேவையாற்றியுள்ளார்.
2011 ஆம் ஆண்டு ஜுன் மாதமளவில் முன்னனி ஆதன விற்பனை நிறுவனமான பிரைம் லேண்ட் தனியார் கம்பனியினால் இந்தக் கம்பனியின் நிருவாகப் பணிகள் பொறுப்பேற்கப்பட்டதன் பின்னர் கம்பினியில் மேற்கொள்ளப்பட்ட மீள் கட்டமைப்பின் பின்னர் அவர் பணிப்பாளர், முகாமையாளர் தகவல் முறைமை மற்றும் இணக்கப்பாடு பதவியில் நியமிக்கப்பட்டதுடன் கம்பனியின் நிருவாகப் பணிகள் எச்.என்.பீ பீ.எல்.சீ நிறுவனம் பொறுப்பேற்றதன் பின்னர் இலங்கை மத்திய வங்கியினால் ஆரம்பிக்கப்பட்ட நிதிப் பிரிவுகளின் ஒருங்கிணைந்த நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் முகாமைத்துவத்தை மீள் கட்டமைப்பதற்காக இடமளிக்கும் பொருட்டு 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சுயமாகவே குறித்த பதவியில் இருந்து விலகிக் கொண்டார்.
திரு. அரங்கல அவர்கள் இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவனத்தின் சான்றிதழ் பெற்ற வணிகக் கணக்காளராவார். வியாபாரக் கற்கை, கணக்கியல் மற்றும் கணக்காய்வு டிப்ளோமாதாரியான அவர் இலங்கை கணக்கியல் கற்கை நிறுவனத்தின் (AAT) அங்கத்தவரும் சான்றிதழ் பெற்ற தொழில்சார் முகாமையாளர்கள் நிறுவனத்தின் (FCPM) சான்றிதழ் பெற்ற தொழில்சார் முகாமையாளருமாவார். இலங்கையின் முன்னனி கணக்காய்வு நிறுவனங்களில் சிரேஷ்ட பதவிகளை வகித்துள்ள அவர் கணக்காய்வு தொடர்பில் 18 வருட அனுபவத்தைக் கொண்டுள்ளவராவார்.
திரு. ருவன் பெரேரா அவர்கள் இத்துறை தொடர்பில் 18 வருட அனுபவத்துடன் இந்த நிறுவனத்தில் இணைகின்றார். எச்.என்.பீ பினான்ஸ் கம்பனியின்......
திரு. ருவன் பெரேரா அவர்கள் இத்துறை தொடர்பில் 18 வருட அனுபவத்துடன் இந்த நிறுவனத்தில் இணைகின்றார். எச்.என்.பீ பினான்ஸ் கம்பனியின் நுண்நிதித் துறையில் தனது தொழிலை ஆரம்பித்ததுடன் திரு. ருவன் பெரேரா அவர்கள் மனித வள முகாமைத்துவ விடயத்தில் காட்டிய அர்ப்பணிப்பு மற்றும் தேர்ச்சியின் ஊடாக தான் நிறுவனத்துக்குத் தேவையான வளம் என்பதை உறுதிப்படுத்தினார். அவர் வணிக நிருவாகம் தொடர்பான பட்டதாரியாவார். எச்.என்.பீ பினான்ஸ் கம்பனியில் தற்பொழுது வகிக்கின்ற பதவியின் ஊடாக தனது அனுபவத்தையும் நுட்பத்தையும் குறித்த துறைக்கு வழங்கியதன் ஊடாக பாரிய பங்களிப்பைச் செய்துள்ளார்.
திரு. பிமல் அவர்கள் நுண்நிதி துறையில் 16 வருட காலத்துக்கு மேற்பட்ட அனுபவத்தைக் கொண்டவராவார். எச்.என்.பீ பினான்ஸ் நிறுவனத்தில்......
திரு. பிமல் அவர்கள் நுண்நிதி துறையில் 16 வருட காலத்துக்கு மேற்பட்ட அனுபவத்தைக் கொண்டவராவார். எச்.என்.பீ பினான்ஸ் நிறுவனத்தில் சிறந்த அனுபவங்களைப் பெற்றுள்ள அவர் நிதி உற்பத்தி சந்தைப்படுத்தலில் மிகச் சிறந்த அனுபவத்தைப் பெற்றுள்ளதுடன் தான் பதவி வகிக்கும் நிறுவனத்தின் சொத்து என இந்த நிறுவனத்தின் இருப்பில் தடம் பதித்துள்ளார்.
திரு. கமல் அவர்கள் 18 வருடங்களுக்கு மேற்பட்ட காலம் நுண்நிதித் துறையில் ஈடுபடுபவராவார். அவர் எச்.என்.பீ கம்பனியின் ஊடாக தனது......
திரு. கமல் அவர்கள் 18 வருடங்களுக்கு மேற்பட்ட காலம் நுண்நிதித் துறையில் ஈடுபடுபவராவார். அவர் எச்.என்.பீ கம்பனியின் ஊடாக தனது தொழிலை ஆரம்பித்ததுடன் குறித்த நிறுவனம் மற்றும் தொழில்துறை தொடர்பில் அவரது தெளிவான அர்ப்பணிப்பு, சேவை அனுபவங்கள் ஊடாக அவர் பெற்றுக் கொண்ட அறிவு மற்றும் தேர்ச்சியின் காரணத்தால் நிறுவனத்தில் பதவியுயர்வுகளை அவர் பெற்றுக் கொள்ளுவதற்கு முடியுமானதுடன் தொழில்துறையில் தனது ஆற்றல் தொழில்சார் தகைமையைக் கொண்ட அவர் ஒரு நுண்நிதித்துறை தொடர்பான டிப்ளோமாதாரியுமாவார்.
நுண்நிதித் துறையில் 17 வருடங்களுக்கு மேற்பட்ட அனுபவத்தைக் கொண்ட திரு. மஹிந்த அவர்கள் இந்த நிறுவனத்தில் தற்பொழுது......
நுண்நிதித் துறையில் 17 வருடங்களுக்கு மேற்பட்ட அனுபவத்தைக் கொண்ட திரு. மஹிந்த அவர்கள் இந்த நிறுவனத்தில் தற்பொழுது வகிக்கின்ற பதவில் தொழில்துறையின் முக்கிய துறைகளில் இருந்த அனுபவத்துடன் செயற்படுபவராவார். எச்.என்.பீ பினான்ஸ் கம்பனியில் தனது தொழிலை ஆரம்பித்து அவர் நுண்நிதித் துறையை நெறிப்படுத்துவதற்கு உரிய பல்வேறுபட்ட அம்சங்களைக் கொண்ட அனுபவத்தைப் பெற்றவராவார். அவருடைய அனுபவத்துக்கு மேலதிகமாக நுண்நிதித் துறை தொடர்பான டிப்ளோமா சான்றிதழின் ஊடாக தொழில்சார் தகைமையையும் பெற்றுள்ளார்.
நுண்நிதித் துறையில் 17 வருடங்களுக்கு மேற்பட்ட அனுபவத்தைக் கொண்ட அவர் உரிய தொழில்துறை மட்டுமன்றி வணிகத்தின் பல்வேறுபட்ட......
நுண்நிதித் துறையில் 17 வருடங்களுக்கு மேற்பட்ட அனுபவத்தைக் கொண்ட அவர் உரிய தொழில்துறை மட்டுமன்றி வணிகத்தின் பல்வேறுபட்ட அம்சங்கள் தொடர்பான தேர்ச்சியையும் பெற்றுள்ளார். எச்.என்.பீ பினான்ஸ் கம்பனியுடனான அவரது சேவைக்காலம் 2001 ஆம் ஆண்டு வெளிக்கள நிறைவேற்றுநராக ஆரம்பித்து அவரிடம் காணப்பட்ட தெளிவான தேர்ச்சியின் காரணத்தால் ஒழுங்குமுறையாக அவரது தற்போதைய பதவி வரை முன்னோக்கிப் பயணித்துள்ளார். அவர் நுண்நிதித் துறை [DMF(IBSL/FS)] டிப்ளோமாதாரியாவதுடன் கடன் முகாமைத்துவம் தொடர்பான உயர் டிப்ளோமாதாரியுமாவார்.
திரு. பிரபாத் அவர்கள் 2002 ஆம் ஆண்டு எச்.என்.பீ பினான்ஸ் கம்பனியுடன் இணைந்து கொண்டார். நிறுவனத்துடன் இணைந்து......
திரு. பிரபாத் அவர்கள் 2002 ஆம் ஆண்டு எச்.என்.பீ பினான்ஸ் கம்பனியுடன் இணைந்து கொண்டார். நிறுவனத்துடன் இணைந்து செயற்பட்ட காலப்பகுதிக்குள் அவர் பிரதான தொழிற்பாட்டு துறை தொடர்பில் குறிப்பிடத்தக்க அளவு அறிவினைப் பெற்றுக் கொண்டார். 17 வருடங்களுக்கு மேற்பட்ட காலம் தனது வணிக அறிவு மற்றும் எண்ணக்கருவின் ஊடாக அவர் தொடர்ச்சியாக வணிகப் பணிகளில் ஈடுபடுகின்றார். அவர் நுண்நிதித் துறை தொடர்பான டிப்ளோமாதாரியும் [DMF (IBSL/FS)], கடன் முகாமைத்துவம் தொடர்பான டிப்ளோமாதாரியும் மற்றும் முகாமைத்துவ கற்கை நிறுவனத்தின் பட்டப்பின் படிப்பு டிப்ளோமாதாரியுமாவார்.
24 வருடங்களுக்கு மேற்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டில் பெற்றுக் கொண்ட தகவல் தொழில்நுட்ப துறை அனுபவத்துடன் முன்னணி......
24 வருடங்களுக்கு மேற்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டில் பெற்றுக் கொண்ட தகவல் தொழில்நுட்ப துறை அனுபவத்துடன் முன்னணி நிறுவனங்கள் பலவற்றுக்கு அனைத்து வணிக நடவடிக்கைகள் தொடர்பான தகவல் தொழில்நுட்ப ஒத்துழைப்பு வழங்குகின்றவருமாவார். எச்.என்.பீ பினான்ஸ் கம்பனியுடனான சேவைக்காலம் மூன்று வருடங்களுக்கும் மேற்பட்டதாகும். முகாமைத்துவம் தொடர்பான பட்டப்பின்படிப்பு நிறுவனத்தில் வணிக முகாமைத்துவ டிப்ளோமாதாரியான அவர் British Computer Society இன் அங்கத்தவரும், CISCO மற்றும் Microsoft சான்றிதழ் பெற்ற தொழில்சார்பாளருமாவார்.
வங்கி மற்றும் நிதித் துறையில் 29 வருடங்கள் அனுபவம் வாய்ந்த திரு. துஷார விஜேவர்தன நிறுவன முகாமைத்துவத்திலும் 11 வருடங்கள் அனுபவத்தைப் பெற்ற ஒருவராவார். ...
வங்கி மற்றும் நிதித் துறையில் 29 வருடங்கள் அனுபவம் வாய்ந்த திரு. துஷார விஜேவர்தன நிறுவன முகாமைத்துவத்திலும் 11 வருடங்கள் அனுபவத்தைப் பெற்ற ஒருவராவார். இலங்கை வங்கியலாளர் நிறுவனத்தின் உறுப்பினருமாவார். (Member of Professional Bankers Association) கொழும்பு பல்கலைக்கழகத்தின் வியாபார முகாமைத்துவம் தொடர்பில் பட்டப்பின் படிப்பு டிப்ளோமா கற்கையை பூர்த்தி செய்துள்ள திரு. துஷார விஜேவர்தன அவர்கள் கொழும்பு பல்கலைக்கழகத்தின் வியாபாரக் கற்கை தொடர்பான முதுமானி பட்டம் பெற்றவருமாவார். மேலும் SLICM ( இலங்கை கடன் முகாமைத்துவ நிறுவனம்) இன் சிரேஷ்ட விரிவுரையாளருமாவார். இலங்கையின் தொழில்சார் வங்கியலாளர் சங்கத்தின் உறுப்பினருமான அவர் தற்பொழுது HNB FINANCE நிறுவனத்தின் உதவிப் பொது முகாமையாளர் (கடன்) ஆக சேவையாற்றுகின்றார்.
நிதித் துறை தொழில்சார்பாளரான திரு. சமீர அவர்கள் நுண்நிதித் துறையில் 15 வருடங்களுக்கு மேற்பட்ட அனுபவத்தைக்......
நிதித் துறை தொழில்சார்பாளரான திரு. சமீர அவர்கள் நுண்நிதித் துறையில் 15 வருடங்களுக்கு மேற்பட்ட அனுபவத்தைக் கொண்டவராவார். வணிகம் மற்றும் கணக்கியல் தொடர்பான நிறைவேற்று டிப்ளோமா மற்றும் வணிகம் மற்றும் நிதி தொடர்பான பட்டப்பின் படிப்பு டிப்ளோமாவையும் கொண்டுள்ளார்.
நுண்நிதித் துறையில் 15 வருடங்களுக்கு மேற்பட்ட அனுபவத்தைக் கொண்ட திரு. மஞ்ஜுல அவர்கள் கணக்கு உதவியாளராக......
நுண்நிதித் துறையில் 15 வருடங்களுக்கு மேற்பட்ட அனுபவத்தைக் கொண்ட திரு. மஞ்ஜுல அவர்கள் கணக்கு உதவியாளராக எச்.என்.பீ பினான்ஸ் கம்பனியில் தனது தொழிலை ஆரம்பித்தார். நிறுவனத்தில் சேவையாற்றும் போது பொதுவாக கைத்தொழில் துறையில் குறிப்பாக அது சார்ந்த எண்ணக்கரு மற்றும் கணக்கியல் தொடர்பாக விரிவான மற்றும் மதிப்பிட முடியாத அனுபவங்களைக் கொண்டவராவார்.
கைத்தொழில் துறையில் 14 வருடங்களுக்கு மேற்பட்ட அனுபவத்தைக் கொண்டுள்ள திரு. அனுர அவர்கள் மனித வள முகாமைத்துவம்......
கைத்தொழில் துறையில் 14 வருடங்களுக்கு மேற்பட்ட அனுபவத்தைக் கொண்டுள்ள திரு. அனுர அவர்கள் மனித வள முகாமைத்துவம், பயிற்சி மற்றும் அபிவிருத்தி துறையில் தேர்ச்சி பெற்றவராவார். எச்.என்.பீ பினான்ஸ் கம்பனியில் சேவையாற்றியதன் ஊடாக பெற்றுக் கொண்ட நுண்நிதித் துறை அனுபவத்தின் மூலம் கைத்தொழில் துறைக்குத் தேவையான ஆற்றலை அவர் பெற்றுக் கொண்டார். திரு. அனுர அவர்கள் மனித வள முகாமைத்துவ சான்றிதழ் பெற்றவர் என்பதுடன் நுண்நிதி டிப்ளோமாதாரியும் பயிற்சி மற்றும் மனித வள தேர்ச்சி அபிவிருத்தி தொடர்பான தேசிய டிப்ளோமாதாரியுமாவார்.
சாமர மல்லவாரச்சி அவர்கள் வங்கியியல் மற்றும் நிதிச் சட்டத் துறை தொடர்பில் சிறந்த அனுபவத்தைக் கொண்டுள்ள ஒரு சட்டத்தரணியாவார். அவர் தற்பொழுது எச் என் பீ பினான்ஸ் நிறுவனத்தின் சட்டப் ப...
சாமர மல்லவாரச்சி அவர்கள் வங்கியியல் மற்றும் நிதிச் சட்டத் துறை தொடர்பில் சிறந்த அனுபவத்தைக் கொண்டுள்ள ஒரு சட்டத்தரணியாவார். அவர் தற்பொழுது எச் என் பீ பினான்ஸ் நிறுவனத்தின் சட்டப் பிரிவின் தலைவராகக் கடமை புரிகின்றார். நிதித் துறை தொடர்பி்ல் 13 வருட கால விரிவான அனுபவங்களுடன் அவர் பணத் தீர்வை மற்றும் கடன் தீர்வைத் துறையிலும் ஒரு நிபுணராக் காணப்படுகின்றார். சட்டக் கோட்பாட்டு விடயத்தில் அவரிடம் உள்ள பரந்த அறிவு, விவேகமான சிந்தனை மற்றும் சட்ட ஆலோசகராக செயற்படுவதன் மூலம் பல நீதிமன்ற வழக்குகளில் சாதகமான முடிவுகளை எடுப்பதில் அவரது தனித்தன்மை வாய்ந்த திறமை உதவியாக இருந்துள்ளது. அவர் தகுதி வாய்ந்த மற்றும் நிபுணத்துவமிக்க பகிரங்க நொத்தாரிசுமாவார். சத்தியப்பிரமாண ஆணையாளரும், கம்பனிச் செயலாளரும் மற்றும் புலமைச் சொத்து முகவருமாவார். எச் என் பீ பினான்ஸ் நிறுவனத்தின் உப நிறுவனமான வெல்த் காட் தனியார் கம்பனியின் கம்பனிச் செயலாளராகவும் அவர் தற்பொழுது பணி புரிகின்றார். அவர் கொழும்பு பல்கலைக்கழத்தில் சட்ட பீடத்தில் சட்டமானி பட்டமும் பெற்றுள்ளார். உயர் கல்வி தொடர்பில் தொடர்ந்தும் சிறந்து செயற்படுவதுடன் பல முதுகலை பயிற்சித் திட்டங்களில் பங்கேற்றுள்ளார். சட்டத்துறையில் இருந்து வணிக நிருவாகப் பிரிவு வரை தனது விடயப்பரப்பை விரிவுபடுத்திய அவர் சிறப்புச் சித்தியுடன் ஐக்கிய இராஜ்ஜியத்தின் வுல்வர்ஹெம்ப்டன் பல்கலைக்கழகத்தில் வணிக நிருவாக முதுகலைப் பட்டத்தையும் பூர்த்தி செய்துள்ளார். அவர் இலங்கை நிதிக் குத்தகை சங்கத்தின் மற்றும் சட்டத்தரணிகள் சங்கத்தின் உறுப்பினராகவும் உள்ளார்.
லீசிங் துறையில் 12 வருடங்களுக்கு மேற்பட்ட அனுபவம் ரங்கன சமீல் அவர்களிடம் உண்டு. சென்றல் பினான்ஸ் பீ எல் சீ நிறுவனத்தில் சந்தைப்படுத்தல் உதவியாளராக தனது தொழில் வாழ்க்கையை ஆரம்பித்த ...
லீசிங் துறையில் 12 வருடங்களுக்கு மேற்பட்ட அனுபவம் ரங்கன சமீல் அவர்களிடம் உண்டு. சென்றல் பினான்ஸ் பீ எல் சீ நிறுவனத்தில் சந்தைப்படுத்தல் உதவியாளராக தனது தொழில் வாழ்க்கையை ஆரம்பித்த அவர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எடுத்த முயற்சியில் பின்னோக்கிச் சென்றதில்லை. எச் என் பீ பினான்ஸ் நிறுவனத்தில் 2018 ஆம் ஆண்டு அதன் முதலாவது லீசிங் பிரிவின் முகாமையாளராக இணைந்து கொண்ட ரங்கன அவர்கள் லீசிங் தொழில் முயற்சி தொடர்பிலான அபிவிருத்தி, அறவீடுகள் மற்றும் கடன் மதிப்பீடுகள் போன்ற பொறுப்புக்களைக் கொண்டிருந்தார் லீசிங் பிரிவை மேம்படுத்துவதற்கான பிரதான கடமைகளை நிறைவேற்றிய ரங்கன அவர்கள் அதன் பெறுபேறாக 2018 ஆம் ஆண்டு சிரேஷ்ட முகாமையாளர் – லீசிங் பதவிக்கு பதவியுயர்த்தப்பட்டார். தற்பொழுது லீசிங் பிரிவுத் தலைவர் பதவி வகிக்கும் அவர் லீசிங் திட்டங்களை மேலும் விரிவுபடுத்திக் கொண்டிருக்கின்றார். ஐக்கிய இராஜ்ஜியத்தின் (Anglia Ruskin University UK) பல்கலைக்கழக்தின் வணிக நிருவாகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவராவார். ரங்கன அவர்கள் சான்றிதழ் பெற்ற (ஆசியா) தொழில்சார் சந்தைப்படுத்துநர் மற்றும் சந்தைப்படுத்தல் தொடர்பான பட்டப்பின் படிப்பு டிப்ளோமா சான்றிதழ் பெற்றவருமாவார். இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவனத்தின் உறுப்பினரான அவருக்கு நிறுவனத்தினால் இலங்கையின் தொழில்சார் சந்தைப்படுத்துநர் விருதும் வழங்கப்பட்டுள்ளது.
திரு.உதார அவர்கள் Telco & Finance துறையில் 14 ஆண்டுகளுக்கும் மேலான சந்தைப்படுத்தல் அனுபவமுள்ள ஒரு சிறந்த தொழில்வல்லுநராவார்......
திரு.உதார அவர்கள் Telco & Finance துறையில் 1 ஆண்டுகளுக்கும் மேலான சந்தைப்படுத்தல் அனுபவமுள்ள ஒரு சிறந்த தொழில்வல்லுநராவார். அவர் Dialog Axiata, Etisalat போன்ற பன்னாட்டு நிறுவனங்களுடனும் மற்றும் சென்ட்ரல் பினான்ஸ் போன்ற பாரிய உள்நாட்டு வணிக நிறுவனங்களில் சேவையாற்றி நிறுவனப் பதவிகளின் உச்சிக்கே சென்றவராவார்.
2018 ஆம் ஆண்டு HNB பினான்ஸ் நிறுவனத்துடன் இணைந்து கொண்டதன் பின்னர் திரு. உதார அவர்கள் நிறுவன மீள் – செயல்பாட்டில் ஒரு குறுகிய காலத்திற்குள் குறிப்பிடத்தக்க அளவு தீர்மானமிக்க முக்கிய பங்கினை வகித்தவராவார். அவர் பல வெற்றிகரமான offline மற்றும் online சந்தைப்படுத்தல் முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். HNB பினான்ஸ் நிறுவனத்துக்காக ஏராளமான கௌரவத்தைக் கொண்டு வந்துள்ள திரு. உதார அவர்கள் தற்போது HNB பினான்ஸ் நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் பிரிவின் தலைவராகவும் உள்ளார்.
அவர் இங்கிலாந்தின் Cardiff Met பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகத்தில் முதுகலைப் பட்டமும் (MBA), இங்கிலாந்து பட்டய சந்தைப்படுத்தல் நிறுவனத்தில் தொழில்சார் டிப்ளோமா சான்றிதழும் Asia Marketing Federation இனால் வழங்குகின்ற சான்றளிக்கப்பட்ட தொழில்சார் சந்தைப்படுத்துநர் (CPM) அந்தஸ்தையும் பெற்றுள்ளார். அவர் இங்கிலாந்தின் பட்டய சந்தைப்படுத்தல் நிறுவனத்தின் (MCIM) அங்கத்தவரும் இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவனத்தின்(ASLIM) இணை உறுப்பினரும் ஆவார்.
வங்கித் துறையில் உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் 15 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தை திரு.ஷானக பெற்றுள்ளார்......
வங்கித் துறையில் உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் 15 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தை திரு.ஷானக பெற்றுள்ளார். HNB பினான்ஸ் நிறுவனத்துடன் இணைந்து கொள்ளுவதற்கு முன்னர் அவர் இலங்கை மற்றும் பிலிப்பைன்ஸ் HSBC கூட்டு வியாபாரத்திலும் செலான் வங்கியிலும் பணியாற்றியுள்ளதுடன் வங்கி, வணிக செயல்முறை மீள் – பொறியியல், கருத்திட்ட முகாமைத்துவம், பகுப்பாய்வு மற்றும் வணிக மாற்றம் ஆகிய துறைகளில் நன்கு அனுபவம் வாய்ந்தவர். Cardiff Metropolitan பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகத்தில் முதுகலைப் பட்டமும், Dr. Mikel J Harry Six Sigma Management Institute Asia நிறுவனத்தில் Lean Six Sigma Black Belt தொடர்பிலான சான்றிதழையும் பெற்றுள்ளதுடன். Leeds பல்கலைக்கழகத்தில் புத்தாக்க முகாமைத்தும் தொடர்பான சான்றிதழ் பாடநெறியையும் பூர்த்தி செய்துள்ளார். மேலும் திரு.ஷானக அவர்கள் ஒரு சான்றளிக்கப்பட்ட Lean Six Sigma Black Belt பயிற்சியாளரும் ஆவார்.
2004 HNB பினான்ஸ் நிறுவனத்துடன் இணைந்து கொண்டதன் பின்னர் திரு. உஷான் அவர்கள் நிறுவனம் தொடர்பிலான முழு அனுபவத்தைக் கொண்டுள்ளவராவார்......
2004 HNB பினான்ஸ் நிறுவனத்துடன் இணைந்து கொண்டதன் பின்னர் திரு. உஷான் அவர்கள் நிறுவனம் தொடர்பிலான முழு அனுபவத்தைக் கொண்டுள்ளவராவார். அவர் கணக்கியல், தொழிற்பாடுகள், கடன் தகவல் பணியக இணக்கப்பாடு , கிளை வலையமைப்புச் செயல்பாடுகள் மற்றும் மிக சமீபத்தில் வணிக செயல்முறை மீள் பொறியியல் தொடர்பில் அவர் தனது திறமைகளை வளர்த்துக் கொண்டார். 2 ஆண்டுகளாக BPR திட்டத்தை வெற்றிகரமாக வழிநடத்திய பின்னர், BPR பிரிவொன்று அறிமுகப்படுத்தப்பட்டதுடன், மேலும் பல செயல்பாட்டு செயல்திறன்களை நிறுவனத்திற்கு கொண்டு வருவதில் முக்கிய பங்கு வகித்தவருமாவார் திரு. உஷான் அவர்கள் தற்போது BPR பிரிவின் தலைவராகவும் உள்ளார். திரு.உஷான் அவர்கள் ஒரு சான்றளிக்கப்பட்ட Lean Six Sigma Black Belt பெற்றுள்ளவருமாவார். இலங்கை கடன் முகாமைத்துவ நிறுவனத்தில் CCMF சான்றிதழும் CITI நிறுவனத்தில் ஆடை முகாமைத்துவ சான்றிதழும் பெற்றுள்ளதுடன் இலங்கை கடன் முகாமைத்துவ நிறுவனத்தில் கடன் முகாமைத்துவம் தொடர்பான உயர் தொழில்சார் டிப்ளோமா பாடநெறியையும் கற்றுக் கொண்டிருக்கின்றார்.
லலங்க என்பவர் கம்பனியின் நிதி மற்றும் தொழிற்பாட்டு வணிக நடவடிக்கைகள் தொடர்பில் சுயாதீன மற்றும் விடயத்தை அடிப்படையாகக் கொண்ட மதிப்பீட்டை வழங்குவதில் சிறந்த பயிற்சியைப் பெற்றுள்ள தொழ...
லலங்க என்பவர் கம்பனியின் நிதி மற்றும் தொழிற்பாட்டு வணிக நடவடிக்கைகள் தொடர்பில் சுயாதீன மற்றும் விடயத்தை அடிப்படையாகக் கொண்ட மதிப்பீட்டை வழங்குவதில் சிறந்த பயிற்சியைப் பெற்றுள்ள தொழில் வல்லுநராவார்.
லலந்த என்பவர் 2019 ஆம் ஆண்டு எச் என் பீ பினான்ஸ் கம்பனியுடன் இணைந்து கொண்டதுடன் தற்பொழுது எச் என் பீ பினான்ஸ் கம்பனியினால் முறையானவாறு நடைமுறைகளைப் பின்பற்றி வினைத்திறனுடன் செயற்படுவதை உறுதிப்படுத்திக் கொண்டு உள்ளக கணக்காய்வுப் பிரிவின் தலைவராகவும் செயற்படுகின்றார். பீ ஆர் த சில்வா கம்பனி மற்றும் எம் டபிள்யு மெண்டிஸ் கம்பனி போன்ற மதிப்புமிக்க கணக்காய்வு நிறுவனங்களில் பணி புரிந்து கணக்காய்வுத் துறையில் 12 வருடங்களுக்கு மேற்பட்ட பெறுமதியான அனுபவங்களையும் பெற்றுள்ள ஒருவராவார்.
திரு. எராஜ் கனகரத்தினம் அவர்கள் நுண்நிதி நிறைவேற்று உத்தியோகத்தராக எச் என் பீ பினான்ஸ் நிறுவனத்தில் இணைந்து கொண்டவராவார். அவரது செயலாற்றுகை, அர்ப்பணிப்பு மற்றும் தொழில் நிமித்தம் க...
திரு. எராஜ் கனகரத்தினம் அவர்கள் நுண்நிதி நிறைவேற்று உத்தியோகத்தராக எச் என் பீ பினான்ஸ் நிறுவனத்தில் இணைந்து கொண்டவராவார். அவரது செயலாற்றுகை, அர்ப்பணிப்பு மற்றும் தொழில் நிமித்தம் காட்டிய ஒழுக்க விழுமியங்கள் அவரது துரித உயர்வுக்கு காரணங்களாக அமைந்தன. கடந்த 18 ஆண்டுகளாக எச்என்.பீ நிறுவனத்துக்கு அவரால் வழங்கப்பட்ட அளப்பரிய சேவையின் அடிப்படையில் கிளை முகாமையாளர் , பிராந்திய முகாமையாளர் அதன் பின்னர் பிரதான முகாமையாளர் பதவி வரை திரு. எராஜ் அவர்கள் பதவியுயர்வு பெற்றார். பின்னர் அவர் வணிகக் கடன் பிரிவின் தலைவராக பதவியுயர்வு பெற்றதுடன் அப் பதவியில் பணிபுரிந்து கொண்டு பல்லாயிரக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு அவர்களது வணிக நடவடிக்கைகளை மேம்படுத்துவத்துவதற்காக ஒத்துழைப்பு வழங்கி நிறுவனத்தின் நோக்கத்தை அடைந்து கொள்ளுவதற்கும் இளமையான தொழில் வல்லுநர் குழுவுக்கும் தலைமை வகிக்கின்றார். திரு. எராஜ் அவர்கள் இலங்கை வங்கியியலாளர் நிறுவனத்தில் நுண் நிதியியல் தொடர்பிலான டிப்ளோமா சான்றிதழைப் பெற்றுள்ளதுடன், வயம்ப பல்கழைக்கழத்தில் ஆங்கில டிப்ளோமாதாரியுமாவார். தீவிர கிரிக்கட் ரசிகரான திரு.எராஜ் அவர்கள் இலங்கை கிரிக்கட் நடுவர் சங்கத்தின் உறுப்பினருமாவார் என்பதுடன் இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் நடுவராகவும் தற்பொழுது செயற்படுகின்றார்.
திரு. சுஜித் குமார HNB FINANCE PLC. இன் தலமை அதிகாரி- கடன் மீள்பெறல் சமீபத்தில் பணியாற்றி வருகிறார்....
திரு. சுஜித் குமார HNB FINANCE PLC. இன் தலமை அதிகாரி- கடன் மீள்பெறல் சமீபத்தில் பணியாற்றி வருகிறார். HNB FINANCE இல் 16 வருட கால சேவை அனுபவத்தைக் கொண்டுள்ள திரு. சுஜித் குமார நிறுவனத்தின் பல பிரிவுகளில் கடமையாற்றி சிறந்த அனுபவத்தைப் பெற்றுள்ளார்.
2004இல் HNB FINANCE கம்பனியில் கள நிறைவேற்று உத்தியோகத்தராக சேவையில் இணைந்துகொண்ட திரு சுஜித் குமார தனது அர்ப்பணிப்பு மற்றும் திறமை காரணமாக படிப்படியாக பதவி உயர்வுகளை எட்டித் தொட்டு நிறுவனத்தின் பல படிநிலைகளை பிரதிநிதித்துவம் செய்துள்ளதோடு, கள முகாமையாளர், முகாமையாளர் – (மீள் அறவீடுகள் மற்றும் சட்டம்), கிளை முகாமையாளர், பிரதேச முகாமையாளர் மற்றும் சிரேஸ்ட முகாமையாளர் – மீள் அறவீடு போன்ற பதவிகளை வகித்து பல துறைசார்ந்த அனுபவத்தைப் பெற்றுள்ளார்.
தொழில்சார் அனுபவத்திற்கு மேலதிகமாக அக்வைனாஸ் உயர் கல்வி நிறுவனத்தில் முகாமைத்துவ டிப்ளோமாவையும், முகாமைத்துவம் தொடர்பான உயர் டிப்ளோமாவையும் பூர்த்தி செய்துள்ள திரு சுஜித் குமார ஐ.பி.எஸ்.எல் இல் நுண் நிதி டிப்ளோமாவையும் பெற்றுள்ளதுடன், தற்போது ஐக்கிய இராச்சியத்தின் க்லூஸ்டசெயார் பல்கலைக்கழகத்தில் MBA கற்கை நெறியைப் பயின்று வருகிறார்.
இலங்கையின் முன்னணி தனியார் வங்கியான HNB வங்கியில் 33 வருடங்கள் அனுபவத்தைக் கொண்ட திரு. இந்திரஜித் கருணாரத்ன வங்கித் துறையில் பல்வேறு பதவிகளை வகித்த தொழில்சார் நிபுணத்துவத்தைக் கொண்...
இலங்கையின் முன்னணி தனியார் வங்கியான HNB வங்கியில் 33 வருடங்கள் அனுபவத்தைக் கொண்ட திரு. இந்திரஜித் கருணாரத்ன வங்கித் துறையில் பல்வேறு பதவிகளை வகித்த தொழில்சார் நிபுணத்துவத்தைக் கொண்ட ஒருவராவார். HNB வங்கியில் தகவல் தொழில்நுட்ப கணக்காய்வுப் பிரிவின் தலைவராகச் சேவையாற்றியுள்ள அவர் வங்கி மற்றும் நிதித் தகுதி (IBSL) மற்றும் ISACA (SL) இன் உறுப்பினருமாவார். தற்பொழுது HNB FINANCE நிறுவனத்தின் கடன் நிருவாகப் பிரிவின் தலைவராகவும் திரு. இந்திரஜித் சேவையாற்றுகின்றா
முதலீட்டு நிறைவேற்றுநராக 2004 ஆம் ஆண்டு தொடக்கம் தனது தொழிலை ஆரம்பித்த திரு. டிசான் அன்ரூ அவர்கள் மிகக் குறுகிய காலத்துக்குள் அதாவது 2007 ஆம் ஆண்டு வணிகம் மற்றும் சந்தைப்படுத்தல் அ...
முதலீட்டு நிறைவேற்றுநராக 2004 ஆம் ஆண்டு தொடக்கம் தனது தொழிலை ஆரம்பித்த திரு. டிசான் அன்ரூ அவர்கள் மிகக் குறுகிய காலத்துக்குள் அதாவது 2007 ஆம் ஆண்டு வணிகம் மற்றும் சந்தைப்படுத்தல் அபிவிருத்தி முகாமையாளராக நிறுவனத்தில் அவர் நிரூபித்துக் காட்டிய செயற்திறன் மற்றும் இலக்குகளை பூர்த்தி செய்யும் போது காட்டிய விடா முயற்சிகள் காரணமாக தனது முதலாவது பதவி உயர்வைப் பெறுகின்றார். 2011 ஆம் ஆண்டு நிலையான வைப்புப் பிரிவின் சிரேஷ்ட முகாமையாளராக நியமிக்கப்படுவதுடன் 2020 ஆம் ஆண்டு தொடக்கம் HNB FINANCE PLC இன் நிலையான வைப்புப் பிரிவின் முகாமைத்துவத் தலைவராகவும் பிரிவுத் தலைவராகவும் செயற்படுகின்றார்.