011 202 4848

வலைப்பதிவு

வீட்டுக் கடன்களின் முக்கியத்துவம்

வேகமா செல்லுகின்ற பொருளாதார வீட்டுக் கடன் என்பது வீடு வாங்குவதற்கான முக்கியமான மற்றும் பயனுள்ள நிதிக் கருவியாக மாறியுள்ளது. HNB FINANCE  நிறுவனத்தினால் வழங்கப்படுகின்ற நிவஹன வீட்டுக் கடன் இலங்கையில் உள்ள பிற நிதி நிறுவனங்கள் வழங்குகின்ற வீட்டுக் கடனுடன் ஒப்பிடுகையில் உங்கள் கனவு வீட்டைக் கட்டியெழுப்ப நெகிழ்வான மாற்று வழிமுறைகளை முன்வைப்பதன் மூலம் இந்த வகையான கடன் மிகவும் கவர்ச்சிகரமானவையாக உள்ளது.

வீட்டுக் கடன் என்றால் என்ன ?

பொதுவாகக் குறிப்பிடுவதாயின் வீட்டுக் கடன் என்பது வீடொன்றை வாங்குவது அல்லது நிருமாணிப்பதற்கு வசதிகளை வழங்கும் பொருட்டு உங்களுக்கு நிதியைக் கடனாகப் பெற்றுக் கொள்ள இடமளித்து வங்கி அல்லது நிதி நிறுவனத்தினால் வழங்கப்படுகின்ற நிதிக் கருவியாகும். வேறு கடனைப் போன்றே இதிலும் வட்டித் தொகை அறவிடப்படுவதுடன் கடன் தொகை குறிப்பிட்ட காலப் பகுதிக்குள் திருப்பி வங்கிக்கு செலுத்துதல் வேண்டும்.

துரிதமாக கடன் தொடர்பில் நடவடிக்கை எடுத்தல், வீட்டுக்கு சமூகமளித்து சேவை வழங்குதல் மற்றும் உங்களது வீட்டைக் கட்டியெழுப்புவதற்கு உதவும் பொருட்டு வழங்கப்படுகின்ற ஏனைய உதவிச் சேவைகளையும் வீட்டுக் கடன் திட்டத்தின் மூலம் வழங்க முடியும்.

வீட்டுக் கடன் இலகுவானதாகும் மற்றும் வசதியானதாகும்

பணத்தை சேமித்து குறித்த பணத் தேவைப்பாடுகளுக்காகப் பயன்படுத்துதல் உங்களது கனவு வீட்டை வாங்குதல் அல்லது நிருமாணித்தல் சம்பிரதாய முறையாகும். தொடர்ந்தும் அதிகரித்துச் செல்லுகின்ற வீடு மற்றும் காணிகளின் விலைகள் காரணத்தால் நீங்கள் வீடு ஒன்றை வாங்குவதற்காக போதுமான பணத்தை சேமித்து வைப்பது கடினமான விடயம மாறியுள்ளது. எவ்வாறாயினும் வீட்டுக் கடன் மூலம்னானது இலங்கையில் உங்களது வீட்டை வாங்குவதற்கு அல்லது கட்டுவதற்கான நிதி வசதிகளை வழங்குகின்றது.

எச் என் பீ பினான்ஸ் வீட்டுக் கடன் திட்டத்தின் மூலம் உங்களுக்கு உங்களுடைய வீட்டை நிருமாணிக்கும் போது உரிய கடன் தொகையை கட்டம் கட்டமாகப் பெற்றுக் கொள்ளக் கூடிய சந்தர்ப்பம் கிடைக்கின்றது. ஆனாலும் நீங்கள் வீடு ஒன்றை வாங்குவதாயின் மொத்தக் கடன் தொகையும் வழங்கப்படும் நிதியை வீண் விரயம் செய்யாதிருப்பதற்கு இவ்வாறு மேற்கொள்ளப்படுகின்றது.

நெகிழ்வான கடன் தொகையை திருப்பிச் செலுத்தும் காலப் பகுதி

வீட்டுக் கடன் குறைந்த வட்டி விகிதத்தில் நெகிழ்வுத் தன்மையுடனான கடன் தொகையை திருப்பிச் செலுத்தும் காலப் பகுதிக்காக வழங்கப்படுவதால் அது உங்களுக்கு இலகுவானதாக இருக்கும். நிவஹன வீட்டுக் கடன் மூலம் 10 ஆண்டுகள் வரையிலான ஆகக் கூடிய கடனைத் திருப்பிச் செலுத்தும் காலப் பகுதி வழங்கப்படுவதுடன் இதன் மூலம் நீண்ட கால நிதிச் சுமையை ஏற்படுத்தாது மொத்தத் தொகையையும் திருப்பிச் செலுத்துவதற்கான காலப் பகுதி வழங்கப்படும்.

இனி தொடர்ந்தும் வாடகைக் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை

வீட்டுக் கடனைப் பெறுவது ஒரு பெரிய நிதிச் சுமையாகத் தோன்றலாம், ஆனால் நீண்ட காலமாக கவனத்தில் எடுத்துக் கொள்ளும் போது இந்த உண்மை இதற்கு நேர்மாறானதாக இருக்கும் நீங்கள் வீட்டுக் கடனை எடுத்து அதை முழுமையாக திருப்பிச் செலுத்தியவுடன், வழக்கமான பாவனைச் சேவைகளைத் தவிர வாடகை போன்ற இதர செலவுகளைப் பற்றி நீங்கள் தொடர்ந்தும் கவலைப்பட வேண்டிய தேவை கிடையாது.

காலப் போக்கில் சொத்தை மதிப்பிடுவதன் மூலம் கிடைக்கின்ற நன்மைகள்

எதிர்பாராத தாமதங்கள் காரணமாக உங்கள் சொந்தப் பணத்தைப் பயன்படுத்தி ஒரு வீட்டைக் கட்டுவது மிகவும் நேரத்தைச் செலவழிக்கும் பணியாக இருக்கும்போது, ​​வெளிப்புற பொருளாதார காரணிகளால் அது அதிக செலவாகும் அபாயமும் உள்ளது. இருப்பினும், வீட்டுக் கடனைப் பொறுத்தவரை, சரியான நேரத்தில் கடனை வழங்குவதன் மூலம் இவ்வாறான சிக்கலைத் தவிர்த்துக் கொள்ள முடியும்.

வீட்டுக் கடனைப் பயன்படுத்தி ஒரு கடுமையான காலக்கெடுவிற்குள் சரியான திட்டத்தின் படி ஒரு வீடு கட்டப்படுவதனால் கட்டுமான தாமதங்கள் குறித்து கவலைப்படத் தேவையில்லை. மேலும், இது திட்டத்தின் படி கட்டப்பட்டிருப்பதால், குறிப்பாக உங்களுக்கு உங்கள் சொத்தை விற்பனை செய்வதற்கு கருதும் பட்சத்தில் ,உண்மையிலேயே  நீண்ட காலமாக உங்கள் சொத்தின் மதிப்பை அதிகரிப்பதன் பலனை உங்களுக்குப் பெற்றுக் கொள்ள முடியும்.

குறுகிய காலத்திற்கு எடுத்துக் கொள்ளும் பட்சத்தில் வீட்டுக் கடன் என்பது அதன் வசதி மற்றும் நெகிழ்வுத்தன்மை. காரணத்தால் இன்று உலகின் மிக முக்கியமான தேவைப்பாடுகளில் ஒன்றாக இது கருதப்படுகின்றது., HNB FINANCE நிறுவனத்தினால் வழங்கப்படும் நிவஹன வீட்டுக் கடன் உங்களுக்கு பல நன்மைகளை அனுபவிப்பதற்கான வாய்ப்பை வழங்குவதோடு மட்டுமல்லாமல், உங்கள் கனவு இல்லத்தை எளிதில் கட்டியெழுப்பவும் உதவும். ஏனெனில் உங்கள் இலக்குகளை அடைய தேவையான அனைத்து சேவைகளையும் நாங்கள் வழங்குவதே இதற்குக் காரணமாகும்.