011 202 4848

வலைப்பதிவு

பணத்தைக் கடனாகப் பெறுவதற்கான மிகச்சிறந்த 6 வழிகள்

நீங்கள், சில உடனடிச் செலவுகளைச் செய்யவேண்டியுள்ள வீட்டில் இருக்கும் பெற்றோராக இருந்தாலும் அல்லது தமது நிதித் தேவயைப் பூர்த்திசெய்துகொள்ள கூடுதல் உதவி தேவைப்படும் சம்பளம் பெறும் பணியாளராக இருந்தாலும், தேவை ஏற்பட்டால் பணத்தைக் கடனாகப் பெறுவதற்கு பல தெரிவுகள் உள்ளன. வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் போன்ற பாரம்பரிய நிதி நிறுவனங்களால் வழங்கப்படும் சேவைகள் முதல் கடன் அட்டை மூலமாக பெறுகின்ற கடன்கள்வரை பரந்த பரப்பிலான நிதிசார் தெரிவுகள் அவற்றில் சில ஆகும்.

உங்கள் பணத்தேவையைப் பூர்த்திசெய்துகொள்வதில் உங்களுக்கு உதவக்கூடிய மிகவும் பிரபலமான சில கடன் மூலங்கள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன.

1. வங்கி அல்லது நிதி நிறுவனத்தால் வழங்கப்படும் தனிநபர் கடன்

பெரும்பாலான வங்கிகளும் நிதி நிறுவனங்களும் தனிப்பட்ட கடன் சேவைகளை வழங்குகின்றன. குறிப்பாக நீங்கள் சம்பளம் பெறும் பணியாளராக இருந்தால், நீங்கள் மிக எளிதாக தனிநபர் கடன்பெற விண்ணப்பிக்கலாம். கடனைப் பெறுவதன் மூலம் நீங்கள் கடன் வழங்குநருக்கு வட்டியைச் செலுத்தும் கடப்பாட்டுக்கு ஆளாவதுதோடு, கடன் தொகை மற்றும் அதற்கான காலம் போன்ற நிபந்தனைகளின் அடிப்படையில் வட்டி மாறுபடலாம். அதேபோல் கடனை வழங்கும் நிறுவனத்திற்கு அமையவும் வட்டிவீதம் மாறுபடலாம். உதாரணமாக, HNB பினான்ஸ் போன்ற நிதி நிறுவனங்கள் வழங்கும் வட்டி விகிதங்கள் சாதாரண வங்கிகளின் வட்டி விகிதங்களை விடக் குறைவாக இருக்கும்.

HNB பினான்ஸ் நிறுவனத்தில், இலங்கையில் பெறமுடியுமான சிறந்த வட்டிவீதம் கிடைப்பதை உறுதிசெய்யும் அதேசமயம், விரைவாகவும் வினைத்திறனாகவும் ரிலாக்ஸ் தனிநபர் கடன் வசதியை நீங்கள் பெறலாம்.

இரண்டு தனிப்பட்ட உத்தரவாதிகளின் பேரில் 02 மில்லியன் வரை அல்லது ஒரு சொத்தின் அடமானத்தின் பேரில் 12 மில்லியன் வரையான தொகையைப் பெற்று அதனைச் திருப்பிச் செலுத்த ஐந்து ஆண்டுகள் வரை எடுத்துக்கொள்ள முடியும்.

2. அடகு வைத்தலும் தங்கக் கடன்களும்

உங்களின் கடன் சம்பந்தப்பட்ட அறிக்கை சிறப்பானதாக இல்லையெனின், அடகு நிலையத்தில் பணத்தைக் கடனாப் பெறுவது அதற்கான இன்னுமொரு தெரிவாக இருக்கும். சில நிதிச் சேவை வழங்குநர்களும் வங்கிகளும் தங்கள் நகைகள் அல்லது பிற மதிப்புமிக்க பொருட்களை அடகு வைத்து கடன் பெறுவதற்கான தெரிவினை வழங்குகின்றன. ஆனால் உங்கள் பொருட்களின் பெறுமதியை மதிப்பிடுவதற்கு கடன் வழங்குநருக்கு சிறிது காலம் தேவைப்படுவதோட்டுது, அப்பொருட்களை அடகுவைத்து பெறக்கூடிய கடன் தொகை அவற்றின் மதிப்பீட்டுக்கமைய தீர்மானிக்கப்படும். அவர்கள் வழங்கும் தொகையை நீங்கள் ஏற்றுக்கொண்டால், நிச்சயிக்கப்பட்ட ஒரு காலப்பகுதியில் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு இணங்கும் படிவத்தில் கையொப்பமிட்டு நீங்கள் உடனடியாக பணத்தை எடுத்துச் செல்லலாம்.

HNB பினான்ஸ கம்பெனி ஆகிய நாம், சந்தையில் மிகவும் போட்டித்தன்மையுள்ள சில வட்டி விகிதங்களுடன் தங்கக் கடன் சேவையை வழங்குகிறோம். வாடிக்கையாளர்கள் தங்களுடைய தங்க ஆபரணங்களை அடமானமாக வைத்து, அதன்பேரில் கடனைப் பெறலாம். HNB பினான்ஸ் கம்பெனி வசமுள்ள நவீன இயந்திரங்கள் மற்றும் அனுபவம் வாய்ந்த பணியாளர்களைக்கொண்டு மிகக் குறைந்த காலத்தில் உயர்ந்த தரமான சேவை வழங்கப்படுவதை உறுதிசெய்துகொள்ள முடியும். உங்களின் மதிப்புமிக்க பொருட்களுக்கு 100% பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்கப்படுவதோடு, முன்னறிவித்தல் வழங்காது உங்கள் பொருட்களை மீட்டுக்கொள்ளவும் முடியும்.

3. ஆன்லைன் கடன் வழங்குநர்கள்

வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் போன்றவை பாரம்பரிய கடன் வழங்குநர்களுடன் ஒப்பிடுகையில், ஆன்லைன் கடன் வழங்குநர்கள் மிகவும் வசதியானதாகக் கூறுப்படுவதோடு அவர்கள் உடனடியாக பணத்தை கடனாகப் பெறுவதற்கு வசதியை ஏற்படுத்துகின்றனர். எல்லா வகையான கடன்களும் ஒரே தன்மைகொண்டதாக இருப்பதில்லை என்பதையும், சில வசதிகளில் ஏனையவற்றைவிட அதிகமான குறைபாடுகள் உள்ளன என்பதையும் கவனத்தில்கொள்ள வேண்டும்.

நீங்கள் சிறந்த வட்டியைப்பெற விரும்பினாலும் அல்லது விரைவாக பணம் தேவைப்பட்டாலும், உங்கள் தெரிவைக் கருத்தில்கொண்டு அதற்கான இடர்வரவு மதிப்பிடப்படுவதை உறுதிசெய்யுங்கள். நீங்கள் எந்தளவுக்கு எளிதாகவும் வேகமாகவும் கடனைப்பெறுகிறீர்களோ அந்தளவுக்கு இடர்வரவும் உண்டென்பதை நினைவில் கொள்ளுங்கள்.

4. கடன் செயலிகள்

உங்களிடம் சிறு தேவைகள் அதிகம் இருந்தால், தற்போதைய சந்தையில் பலவிதமான முன்பண செயலிகள் உள்ளன. அத்கைய செயலிகளை வைத்திருக்கும் சில நிறுவனங்கள்தம் வசதிக்குள் உங்களைப் பதிவுசெய்ய சம்பளச் சீட்டு மற்றும் விலைப்பட்டியல்கள் ஊடாக வருமான மூலங்களைக் கோரலாம். அதன் பின்னர் 1 தொடக்கம் 3 நாட்களுக்குள் உங்கள் சிறு கடனைப் பெறு முடியும்.

ஒவ்வொரு கொடுக்கல்-வாங்கலுக்குமான கட்டணம் ஒவ்வொரு விண்ணப்பத்திற்கும் ஏற்ப மாறுபடுவமதால் அவர்களின் சேவைகளைப்பெற பதிவு செய்வதற்கு முன் சில ஆராய்ச்சிகளை மேற்கொள்வது சிறந்த்து.

5. கடன் அட்டை மூலமான பணம் முன்பணம்

உங்களிடம் கடன் அட்டை இருந்தால், அதன் மூலம் மிக எளிதில் முன்பணத்தைப் பெறலாம். நீங்கள் உங்கள் கடன் அட்டைக் கூற்றிலுள்ள பணத்தை முழுமையாகச் செலுத்தியும், உங்கள் சேவை வழங்கும் நிறுவனத்துடன் சிறந்த பதிவைப் பராமரித்தும் வந்திருந்தால், தானியங்கி டெலர் இயந்திரம் (ATM) அல்லது நேரடியாக உங்கள் வங்கியை நாடி முற்பணத்தைப் பெறலாம்.
நீங்கள் பெற்றுக்கொள்ளக் கூடிய பண முற்பணம் வரம்பானது உங்கள் கடன் வரம்பு மற்றும் வங்கியுடன் நீங்கள் பேணும் உறவைக்கொண்டு தீர்மானிக்கப்படும். கடன் அட்டை ஊடாக முற்பணம் பெறுமபோது நீங்கள் கடன் வசதிகளைவிடவும் அதிகமாக வட்டியைச் செலுத்த நேரிடும் என்பதை நினைவில் கொள்ளவும்.

6. நிலையான வைப்புகளின் மீதான கடன்கள்

நீங்கள் உங்கள் நிலையான வைப்பின்பேரில் கடன் பெறலாம் என்பதை அறிவீர்களா? HNB பினான்ஸ் கம்பெனியின் நிலையான வைப்புத் திட்டத்தில் உங்கள் பணத்தை முதலீடு செய்வதில் உள்ள சிறப்பம்சம் என்னவென்றால், தேவையான எச்சந்தர்ப்பத்திலும் உங்கள் வைப்புத்தொகையின் பேரில் விரைவான கடனைப் பெறமுடியும். HNB பினான்ஸில் நிலையான வைப்பைக் கொண்டுள்ள நீங்கள் மிக எளிய செயல்முறை ஊடாக சிரமமின்றி வைப்பின் பெறுமதியில் 90% வரை கடனாகப் பெறலாம்.